அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 
தமிழ்நாடு

ஆர்.பி.உதயகுமாருக்கு கொலை மிரட்டல்: ஓபிஎஸ் ஆதரவாளர் கைது

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஓபிஎஸ் ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 

DIN

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஓபிஎஸ் ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அதிமுக முன்னாள் அமைச்சரும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளருமான ஆர்.பி.உதயகுமார், விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவரின் 307-ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள சங்கரன்கோவில் அருகே நெல்கட்டும்செவல் கிராமத்திற்கு நாளை(செப்.1) செல்லவிருக்கிறார்.

இந்நிலையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மகேந்திரவாடியைச் சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர் சரவண பாண்டியன், ஆர்.பி. உதயகுமாருக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையடுத்து ஆர்.பி.உதயகுமார் தரப்பு புகார் அளித்ததையடுத்து காவல்துறையினர் சரவணபாண்டியனை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில்  சரவண பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொய்யான குற்றச்சாட்டுகள்: ராகுல் மீது உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல்!

டி20 உலகக் கோப்பையில் முதல்முறையாக 2 சூப்பர் ஓவர்கள்..! தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி!

கேரளத்தில் 29 கோயில்களில் ஈஷா மஹா சிவராத்திரி விழா நேரலை!

ஒரே மாவட்டத்தில் திடீரென அதிகரித்த எச்ஐவி பாதிப்பு! பின்னணியில் சமூக ஊடகங்களா?

மருத்துவ படிப்பை நிறைவு செய்த ஸ்ரீலீலா!

SCROLL FOR NEXT