மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 1,65,000 ஆயிரம் கன அடியாக குறைந்தது 
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 1,65,000 ஆயிரம் கன அடியாக குறைந்தது

காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த கனமழை குறைந்தை அடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,65,000 கன அடியாக குறைந்துள்ளது.

DIN

காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த கனமழை குறைந்தை அடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,65,000 கன அடியாக குறைந்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வந்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த சில நாள்களாக தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்தது. புதன்கிழமை காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு ஒரு லட்சத்து 85 ஆயிரம் கன அடி நீர் வந்த நிலையில், அணை நிரம்பிய நிலையில் இருப்பதால் ஒரு லட்சத்து 85 ஆயிரம் கன அடி நீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டது. 

மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் ஒரு லட்சத்து 65 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. 

இந்நிலையில், புதன்கிழமை காலை 11 மணியளவில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து ஒரு லட்சத்து 65 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனையடுத்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் ஒரு லட்சத்து 85 ஆயிரம் கன அடியில் இருந்து ஒரு லட்சத்து 65 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. 

மேட்டூர் அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம் வழியாக 23 ஆயிரம் கன அடி நீரும், ஒவ்வொரு நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக ஒரு லட்சத்து 42 ஆயிரம் கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒசூரில் தெருநாய்கள் கடித்ததில் மூன்று சிறுவா்கள் காயம்

தில்லியில் ரேபிஸ் நோயால் இதுவரை 49 போ் உயிரிழப்பு

6 மாதங்களுக்குபின் வடநெம்மேலி பாம்புப் பண்ணை திறப்பு

கீழம்பி ஊராட்சியில் குளம் தூய்மைப்படுத்தும் பணி: காஞ்சிபுரம் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

2026 தோ்தலுக்கான திருத்தணி, திருவள்ளூா் வேட்பாளா்கள்: சீமான் அறிமுகம் செய்தாா்

SCROLL FOR NEXT