முகப்பு
தமிழ்நாடு

லட்சுமி யானை புதைக்கப்பட்ட இடத்தில் நூற்றுக்கணக்கானோர் மலர் தூவி அஞ்சலி !

புதுச்சேரி மாநிலத்தில் உயிரிழந்த மணக்குள விநாயகர் யானை லட்சுமி புதைக்கப்பட்ட இடத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பால் ஊற்றியும், கற்பூரம் ஏற்றியும், மலர் தூவியம் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:59 AM
லட்சுமி யானை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பால் ஊற்றியும், கற்பூரம் ஏற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தி வரும் மக்கள்.
பகிர்:


புதுச்சேரி மாநிலத்தில் உயிரிழந்த மணக்குள விநாயகர் யானை லட்சுமி புதைக்கப்பட்ட இடத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பால் ஊற்றியும், கற்பூரம் ஏற்றியும், மலர் தூவியம் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி புதன்கிழமை உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்தது. யானை லட்சுமியின் உடலுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அஞ்சலி செலுத்திய பின்பு நகரப் பகுதியில் உள்ள ஜேவிஎஸ் நகர் அருகே வனத்துறை அருகே உள்ள ஒரு இடத்தில் யானையின் உடல் உடல்கூறு ஆய்வுகள் செய்யப்பட்டு புதன்கிழமை இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது. 

இந்நிலையில்,  வியாழக்கிழமை காலை யானை லட்சுமி அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு ஏராளமான பொதுமக்கள் வந்து லட்சுமி யானை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பால் ஊற்றியும், கற்பூரம் ஏற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

மேலும், ஒரு சில பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த பாலை யானை லட்சுமி புதைக்கப்பட்ட இடத்தில் ஊற்றியும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தி வருகின்றனர். 

ஒரு மனிதனுக்கு எப்படி செய்வார்களோ அதுபோல் உயிரிழந்த கோயில் யானைக்கும் பொதுமக்கள் பால் ஊற்றி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.