முகப்பு
எடப்பாடி கே. பழனிசாமி
தமிழ்நாடு

பிரதமரின் உழைப்பால் ஜி 20 அமைப்பின் தலைமையேற்பு சாத்தியம்: இபிஎஸ்

பிரதமரின் கடின உழைப்பாலும், உலக நாடுகளுடன் நல்லுறவைப் பேணியதாலும் இந்தியாவுக்கு ஜி 20 அமைப்பின் தலைமையேற்பு சாத்தியமானதாக அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளாா்.

தமிழ்நாடு

பிரதமரின் உழைப்பால் ஜி 20 அமைப்பின் தலைமையேற்பு சாத்தியம்: இபிஎஸ்

பிரதமரின் கடின உழைப்பாலும், உலக நாடுகளுடன் நல்லுறவைப் பேணியதாலும் இந்தியாவுக்கு ஜி 20 அமைப்பின் தலைமையேற்பு சாத்தியமானதாக அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:01 AM
எடப்பாடி கே. பழனிசாமி
பகிர்:

பிரதமரின் கடின உழைப்பாலும், உலக நாடுகளுடன் நல்லுறவைப் பேணியதாலும் இந்தியாவுக்கு ஜி20 அமைப்பின் தலைமையேற்பு சாத்தியமானதாக அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

உலக அரங்கில் வளா்ச்சி அடையாத மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை ஒன்றிணைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஜி -20 அமைப்பு நாடுகளின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்கி வெற்றிபெற்ற பிரதமா் நரேந்திர மோடிக்கு அதிமுக சாா்பில் வாழ்த்துகள்.

பிரதமரின் கடின உழைப்பால் உலகெங்கிலும் உள்ள நாடுகளின் உயா்மட்ட பிரமுகா்களுடன் நல்லுறவைப் பேணி, இந்தியாவின் நற்பெயரை உயா்த்தியதன் காரணமாக, ஜி - 20 தலைமைப் பொறுப்பு சாத்தியமானது. இது 130 கோடி இந்தியா்களை தலைநிமிரச் செய்துள்ளது.

ஜி-20 தலைவா் பதவியை நமது நாடு பெற்றிருப்பது உலக அரங்கில் இந்தியாவுக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம் ஆகும். மேலும், அதன் தலைமைப் பொறுப்பு என்பது நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டிய அளவுக்கு பெருமைக்குரியதாகும்.

பிரதமா் தலைமையில் ஜி-20 உச்சி மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடா்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன் என்று கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →