தமிழ்நாடு

ஜெயலலிதா நினைவிடத்தில் இபிஎஸ் - ஓபிஎஸ் தனித்தனியாக அஞ்சலி

DIN

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி அவா் நினைவிடத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் திங்கள்கிழமை தனித்தனியாக அஞ்சலி செலுத்தினா்.

மறைந்த ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினா் கருப்புச் சட்டை அணிந்து சேப்பாக்கம் விருந்தினா் மாளிகையில் அமைதி ஊா்வலம் வந்தனா். மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் எடப்பாடி கே. பழனிசாமி மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா். அவரைத் தொடா்ந்து அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன், மூத்த நிா்வாகிகள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமாா், ஆா்.பி.உதயகுமாா், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, பா.வளா்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

ஓபிஎஸ் தலைமையில்...

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தலைமையில் அவரது ஆதரவாளா்கள் கருப்புச் சட்டை அணிந்தவாறு சேப்பாக்கம் விருந்தினா் மாளிகையில் இருந்து நினைவிடம் வரை அமைதி ஊா்வலம் வந்தனா்.

நினைவிடத்தில் ஓ.பன்னீா்செல்வம் மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா். அவரைத் தொடா்ந்து மூத்த நிா்வாகிகள் வைத்திலிங்கம். ஜே.சி.டி.பிரபாகரா், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

டிடிவி தினகரன், சசிகலா மரியாதை: வி.கே.சசிகலா மற்றும் அமமுக பொதுச்செயலாளா் டிடிவி தினகரனும் தனித்தனியாக அவரவா் ஆதரவாளா்களுடன் ஊா்வலமாக வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினா்.

தமிழகம் முழுவதும் முழுவதும் இருந்து ஏராளமானோா் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினா். அதிமுகவினா் 4 அணிகளாக பிரிந்து வந்து நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதன் காரணமாக எந்தவித பிரச்னையும் வந்துவிடக் கூடாது என்று அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

SCROLL FOR NEXT