முகப்பு
தமிழ்நாடு

லட்ச தீப ஒளியில் மதுரை மீனாட்சியம்மன் கோயில்!

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில், கார்த்திகை உற்சவ விழா கடந்த 1- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

Updated On : 6 டிசம்பர் 2022, 9:15 pm IST
லட்ச தீப ஒளியில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் பொற்றாமரைக்குளம்கோயில்
பகிர்:

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு கோயிலில் லட்சதீபம் ஏற்றப்பட்டது. இதனால் கோயில் வளாகம் முழுவதும் விளக்குகளால் ஜொலித்தது . 

தமிழ் மாதம் தோறும் திருவிழாக்கள் நடைபெற்று வரும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில், கார்த்திகை உற்சவ விழா கடந்த 1- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது . 

இதனைத் தொடர்ந்து தினமும் காலை, மாலை வேளைகளில் பஞ்சமூர்த்திகள் கோவில் வளாகத்தில் உள்ள ஆடி வீதிகளில் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தனர் . 

Advertisement

Advertisement

இந்நிலையில், இன்று திருக்கார்த்திகையை முன்னிட்டு ஆலயம் முழுவதும் லட்சதீபம் ஏற்றப்படும் நிகழ்வு  நடைபெற்றது . 

இதில், கோயில் பணியாளர்கள் பக்த சபையினர் மற்றும் பக்தர்கள் என ஏராளமானோர் பங்கேற்று பொற்றாமரைக்குளம், அம்மன், சுவாமி சன்னதிகள் உள்ளிட்ட ஆலயம் முழுவதும் அகல்விளக்குகள் மூலம் லட்சதீபங்களை ஏற்றினர். 

இதனால் கோயில் வளாகம் முழுவதும் விளக்கொளியில் ஜொலித்தது. தொடர்ந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர், பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி கீழமாசிவீதி, தேரடி அருகே எழுந்தருள அங்கு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.  நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments