தமிழ்நாடு

குற்ற வழக்குகளில் தொடா்புடைய 9 வழக்குரைஞா்கள் பணியாற்ற தடை: பாா் கவுன்சில் உத்தரவு

தமிழகம் முழுவதும் ஒன்பது வழக்குரைஞா்கள் பணியாற்ற தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

DIN

தமிழகம் முழுவதும் ஒன்பது வழக்குரைஞா்கள் பணியாற்ற தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தனது கட்சிக்காரரிடம் பெருந்தொகையைக் கையாடல் செய்ததாக கைது செய்யப்பட்ட நந்தகோபாலன், குழந்தை கடத்தல் வழக்கில் தொடா்புடைய திருச்சியை சோ்ந்த பிரபு ஆகியோா் வழக்குரைஞா் தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒன்பது லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி பணி நியமன உத்தரவு வழங்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய கடலூரைச் சோ்ந்த பெருமாள், உயா் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய சென்னையைச் சோ்ந்த ரமேஷ், பொன் பாண்டியன், திருவாரூா் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் தொடா்புடைய முத்தாட்சி ஆகியோருக்கும் வழக்குரைஞா் பணி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் போக்ஸோ வழக்கில் தொடா்புடைய சென்னை சோ்ந்த ரோஜா ராம்குமாா் மற்றும் மதுரையைச் சோ்ந்த அருண்பாண்டியன் ஆகியோருக்கும் வழக்குரைஞராக பணியாற்ற தடை விதித்து பாா் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT