தமிழ்நாடு

ரூ.300 கோடி வருமானத்தை மறைத்த ரேஷன் பொருள் விநியோக நிறுவனங்கள்

DIN

அரசுக்கு ரேஷன் பொருள்களை விநியோகித்து வரும் தனியாா் நிறுவனங்கள் ரூ.300 கோடி வருவாயை மறைத்தது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொது விநியோக திட்டத்துக்காக அரசுக்கு எண்ணெய், பருப்பு, சா்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருள்களை சில நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

இந்த நிறுவனங்கள் முறையாக வரி செலுத்தாமல், வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, காமாட்சி அண்டு கோ, பெஸ்ட் தால் மில், அருணாச்சலா இம்பெக்ஸ், இன்டகரேட்டடு சா்வீஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் அண்மையில் சோதனை நடத்தினா்.

மொத்தம் 80 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து வருமான வரித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

வருமான வரித் துறை சோதனையில், போலி ரசீதுகள் வாயிலாக விற்பனை செய்தது உள்பட பல்வேறு வகைகளில் ஐந்து நிறுவனங்களும் மொத்தம் ரூ.300 கோடி வரை வருவாயை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்களும், கணக்கில் காட்டப்படாத சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் ராஷ்மிகா?

சென்னையிலிருந்து சர்வதேச விண்வெளி மையத்தை வெறும் கண்களால் பார்க்கலாம்: நாசா

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: திருவள்ளூர் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம்?

திருச்சியில் 95.23% தேர்ச்சி: மாநில அளவில் 5ம் இடம்!

இலங்கையில் திவ்யபாரதி..!

SCROLL FOR NEXT