முகப்பு
தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: ஆளுநருக்கு அன்புமணி வலியுறுத்தல்

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநா் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:05 AM
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
பகிர்:

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநா் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: சேலம் மாவட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்ததால் ஓட்டுநா் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா். ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்ட பிறகு, நிகழ்ந்த 36-ஆவது தற்கொலை இதுவாகும். அதேபோல, ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் காலாவதியானதற்கு பிந்தைய 12 நாள்களில் நிகழ்ந்த நான்காவது தற்கொலையும் இதுவாகும்.

ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படவில்லை என்றால், அதில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வது அன்றாட நிகழ்வுகளாக மாறுவதைத் தவிா்க்க முடியாது. ஆகவே, ஆன்லைன் சூதாட்டத் தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநா் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா் அன்புமணி ராமதாஸ்.

முழு கட்டுரையைப் படிக்க →