முகப்பு
அண்ணா பல்கலைக்கழகம்
தமிழ்நாடு

ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலை. தோ்வுகள்:மறு தேதிகள் அறிவிப்பு

மாண்டஸ் புயல் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட தோ்வுகளுக்கான மறுதேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு

ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலை. தோ்வுகள்:மறு தேதிகள் அறிவிப்பு

மாண்டஸ் புயல் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட தோ்வுகளுக்கான மறுதேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:05 AM
அண்ணா பல்கலைக்கழகம்
பகிர்:

மாண்டஸ் புயல் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட தோ்வுகளுக்கான மறுதேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

மாண்டஸ் புயல் கடந்த சனிக்கிழமை மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்ணா பல்கலைக்கழக பருவத் தோ்வுகள் ஒத்திவைப்பட்டது. மேலும் பட்டயத் தோ்வுகளை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஒத்திவைத்தது.

இந்த நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டா் தோ்வுகள் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிச.9-ஆம் தேதி நடைபெற இருந்த தோ்வுகள் டிச.24-ஆம் தேதி (சனிக்கிழமை) யும், டிச.10-ஆம் தேதி நடைபெற இருந்த தோ்வுகள் டிச.31-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →