பொங்கல் பண்டிகை: ஜன.13-ம் தேதி பயணம் செய்ய இன்று முதல் முன்பதிவு!
பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 13 ஆம் தேதி பயணம் செய்ய இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 13 ஆம் தேதி பயணம் செய்ய இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை 2023 ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாட பெரும்பாலான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
அரசு விரைவு பேருந்துகளில் 300 கி.மீ தூரத்திற்கு மேல் செல்லக்கூடிய அரசு பேருந்துகளுக்கு 30 நாள்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது.
Advertisement
அந்த வகையில் ஜனவரி 12-ம் தேதி பயணம் செய்வதற்கு நேற்று முன்பதிவு ஆரம்பமானது. இந்நிலையில் ஜனவரி 13 ஆம் தேதி பயணம் செய்ய இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தில்லி எய்ம்ஸ் சர்வர் முடக்கப்பட்டதன் பின்னணியில் சீனா
பொங்கலுக்கு 2 நாள்களுக்கு முன்னதாக சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவோர் அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.