தமிழ்நாடு

ஆவின் பொருள்கள் எட்டாக் கனியா ஆகிறதா? நெய், வெண்ணெய் விலை உயர்வுக்கு இபிஎஸ் கண்டனம் 

ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலையை ஒன்பது மாதத்தில் மூன்று முறை உயர்த்தி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் திமுக அரசிற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

DIN

சென்னை: ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலையை ஒன்பது மாதத்தில் மூன்று முறை உயர்த்தி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் திமுக அரசிற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கண்டன பதிவில், ஆவின் நோக்கமே குறைந்த விலையில் தரமான பொருள்கலை மக்களுக்கு வழங்குவது தான். ஆனால் திமுக அரசு நெய்யின் விலையினை கடந்த ஒன்பது மாதத்தில் மூன்று முறை உயர்த்தி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த விடியா அரசிற்கு  எனது கடுமையான கண்டனங்கள். கடந்த மார்ச் மாதம் ரூ.515-க்கு கிடைத்த ஆவின் நெய் தற்போது ரூ.115 உயர்த்தப்பட்டு ரூ.630-க்கு விற்கப்படுகிறது.

எளியோர் மற்றும் நடுத்தர வர்கத்தினருக்கு ஆவின் பொருட்களை எட்டாகனியாக்கி இனி பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்கிற நிலைக்கு தள்ளியுள்ளது இந்த திமுக அரசு. இன்று வெண்ணை விலையையும் கிலோவிற்கு ரூ. 20 உயர்த்தியுள்ளனர். 

எளிய மக்கள் தங்களுக்கு தேவையான குறைந்தபட்ச ஊட்டச்சத்தை பால் மற்றும் பால் பொருட்கள் மூலம்தான் பெற்று வருகின்றனர். தற்போது அதுகூட அவர்களுக்கு கிடைக்க விடாமல் தடுப்பதற்கு பெயர்தான் விடியலா?  என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோகன்லாலின் விருஷபா படத்தின் ரிலீஸ் தேதி!

தமிழ்நாடு முழுவதும் தியாகச் சுவர் எழுப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியம்

9 மாவட்டங்களில் இன்று கனமழை!

கூகுள் மேப் பயன்படுத்துபவரா... மெட்ரோ டிக்கெட் முதல் ஜெமினி ஏஐ வரை.. 10 புதிய அம்சங்கள்..!

'பெண்களுக்கான அரசு' என்று கூற முதல்வர் கூச்சப்பட வேண்டும்: இபிஎஸ் கண்டனம்!

SCROLL FOR NEXT