அன்பழகன் புகைப்படக் கண்காட்சி: தொடக்கி வைத்தார் முதல்வர்
தமிழக முன்னாள் அமைச்சர் அன்பழகனின் புகைப்படக் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழக முன்னாள் அமைச்சர் அன்பழகனின் புகைப்படக் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.
சென்னை தேனாம்பேட்டையில் முன்னாள் அமைச்சர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி இந்தக் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரும் பேராசிரியருமான அன்பழகனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி அண்ணா அறிவாலயத்திலுள்ள அண்ணா - கருணாநிதி சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த பேராசிரியர் அன்பழகன் திருவுருவப் படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
Advertisement
அதனைத் தொடர்ந்து அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி புகைப்படக் கண்காட்சியையும் முதல்வர் திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது துரைமுருகன், டி.ஆர். பாலு உள்ளிட்ட அமைச்சர்கள் உடன் இருந்தனர்.