தமிழ்நாடு

அன்பழகன் புகைப்படக் கண்காட்சி: தொடக்கி வைத்தார் முதல்வர்

DIN

தமிழக முன்னாள் அமைச்சர் அன்பழகனின் புகைப்படக் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

சென்னை தேனாம்பேட்டையில் முன்னாள் அமைச்சர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி இந்தக் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. 

முன்னாள் அமைச்சரும் பேராசிரியருமான அன்பழகனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி அண்ணா அறிவாலயத்திலுள்ள அண்ணா - கருணாநிதி சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த பேராசிரியர் அன்பழகன் திருவுருவப் படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

அதனைத் தொடர்ந்து அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி புகைப்படக் கண்காட்சியையும் முதல்வர் திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது துரைமுருகன், டி.ஆர். பாலு உள்ளிட்ட அமைச்சர்கள் உடன் இருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 மாதங்களில் 100 திரையரங்குகள் மூடல்!

ஜார்க்கண்ட் அமைச்சருக்கு 6 நாள் அமலாக்கத்துறை காவல்!

3 மாவட்டங்களில் அதி கனமழை: சிவப்பு எச்சரிக்கை!

பாரதிய ஜனதாவில் கால் பங்கு வேட்பாளர்கள் கட்சிமாறி வந்தவர்கள்!

பொய்களால் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயல்கிறது: மோடி!

SCROLL FOR NEXT