நாளை மறுநாள் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக சனிக்கிழமை வெளியான அறிவிப்பின்படி
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நாளை மறுநாள் திங்கள்கிழமை (19.12.2022) சென்னையில் தலைமை செயலகத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | 3 வருடம் கழித்து ரிலீஸாகும் த்ரிஷாவின் ‘ராங்கி’ திரைப்படம்!
தமிழ்நாடு அமைச்சரவை இரண்டாவது முறையாக மாற்றம் செய்யப்பட்ட பிறகு நடக்கும் முதல் அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும். இந்தக் கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது தொடர்பாக ஆளுநரிடம் கிடப்பில் இருக்கும் மசோதா, புதிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.