சங்ககிரியில் மாணவர்களுக்கு கருப்பு பெல்ட் வழங்கும் விழா
கராத்தே அமைப்பின் சார்பில் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற சங்ககிரி கிளையைச் சேர்ந்த மாணவர்களுக்கு கருப்பு பெல்ட், சான்றிதழ்கள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி: கியோ கோஷின் கராத்தே அமைப்பின் சார்பில் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற சங்ககிரி கிளையைச் சேர்ந்த மாணவர்களுக்கு கருப்பு பெல்ட், சான்றிதழ்கள் வழங்கும் விழா சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கியோ கோஷின் கராத்தே அமைப்பின் சார்பில் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் சங்ககிரி கிளையின் சார்பில் பி.கனகராஜ், எ.சதீஸ்குமார் ஆகியோர் பங்கேற்று கருப்பு பெல்ட் பெற்றனர்.
வெற்றி பெற்ற இரு மாணவர்களுக்கும் சங்ககிரி கியோ கோஷின் கராத்தே அமைப்பின் தலைமை பயிற்சியாளர் கே.அர்ச்சுணன் கருப்பு பெல்ட், சான்றிதழ்களை வழங்கிப் பேசினார்.
Advertisement
Advertisement
கொங்கணாபுரம் தனியார் மெட்ரிக் பள்ளி தாளாளர் கே.ரவிசங்கர், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.