தமிழ்நாடு

புதிய பேருந்துகள் வாங்க அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

புதிய பேருந்துகளை வாங்க அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. 

DIN

புதிய பேருந்துகளை வாங்க அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. 

மாநகர போக்குவரத்துக் கழகம், விரைவு போக்குவரபத்துக் கழகம் திவிர்த்து இதர கோட் டங்களுக்கும் சேர்த்து ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்து பேரவையில் முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், பழைய பேருந்துகளை கழிவு செய்து புதிய பேருந்துகளை வாங்க ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்து கடந்த நவம்பர் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.

இதில், கும்பகோணம் கோட்டத்திற்கு 250 பேருந்துகளும், மதுரை கோட்டத்திற்கு 220 பேருந்துகளும், விழுப்புரம் கோட்டத்திற்கு 180 பேருந்துகள் என ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தில் இயங்கும் பழைய பேருந்துகளுக்கு பதிலாக, ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்குவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

ஒரு பேருந்து ரூ.42 லட்சம் என்ற மதிப்பீட்டில், பிஎஸ்-5 வகை டீசல் பேருந்துகளை வாங்குவதற்கும், இதில் 60 சதவீதம் பேருந்துகளை நகரப் பகுதிகளிலும், 40 சதவீதம் தொலைதூர பேருந்து சேவைக்கும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT