பெரியாரின் நினைவுநாளில் அவருக்கு வணக்கம் செய்கிறேன்: கமல் ட்வீட்!
பெரியாரின் நினைவுநாளில், அவருக்கு வணக்கம் செய்கிறேன் என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
பெரியாரின் நினைவுநாளில், அவருக்கு வணக்கம் செய்கிறேன் என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை (டிச.24) பெரியாரின் நினைவுநாளையொட்டி, அரசியல் தலைவர்கள் பலரும் அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், பாரத் ஜோடோ யாத்திரையில் இருந்து அவருக்கு வணக்கம் செய்கிறேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்க பதிவில், "பாகுபாடு இல்லை, உயர்வு-தாழ்வு இல்லை, பிறப்பில் பெருமை இல்லை என இல்லைகளைப் பிரசாரம் செய்ததோடு, சம சமூகத்தில் பொன்னுலகம் உண்டு என்ற நம்பிக்கையையும் விதைத்த பெரியாரின் நினைவு நாளில், பாரத் ஜோடோ யாத்திரையில் இருந்து அவருக்கு வணக்கம் செய்கிறேன்" என்று கூறியுள்ளார்.