தமிழ்நாடு

கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் 2 பேர் கைது!

கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் 2 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

DIN

கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் 2 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

கோவை, உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்த அக்டோபா் 23ஆம் தேதி நிகழ்ந்த காா் வெடிப்பு சம்பவத்தில் காரில் இருந்த ஜமேஷா முபீன் (29) அதே இடத்தில் உயிரிழந்தாா். முபீன் வீட்டில் போலீஸாா் நடத்திய சோதனையின்போது, ஏராளமான வெடிபொருள்கள், ஐஎஸ் அமைப்புடன் தொடா்புடையதாக பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

இதைத் தொடா்ந்து, காா் வெடிப்பு சம்பவத்தில் தொடா்புடையதாக கோவை உக்கடம் பகுதியைச் சோ்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன்(23), கோவை ஜி.எம்.நகா் பகுதியைச் சோ்ந்த முகமது ரியாஸ் (27), ஃபிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) மற்றும் அஃப்சா் கான் (27) உள்பட 9 போ் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்கள் கோவையைச் சேர்ந்த  சேக் இதயத்துல்லா, சனோபர் அலி ஆகிய இரண்டு பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துவாரகாதீஷ் கோயிலில் குடியரசுத் தலைவர் முர்மு தரிசனம்

இன்பமே... ரகுல் ப்ரீத் சிங்!

இத்தனை கணவர்களா? கவனம் ஈர்க்கும் நிகிலா விமலின் பெண்ணு கேஸ் டீசர்!

‘கூட்ட அறிவியல்’ கொஞ்சமாவது கற்கனும்!

தவெக விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடையாக இல்லை: கரூரில் தொல். திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT