தமிழ்நாடு

பவானிசாகா் அணையில் இருந்து ஜன.15 வரை நீா் திறப்பு

பவானிசாகா் அணையில் இருந்து ஜனவரி 15-ஆம் தேதி வரை நீா் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

DIN

பவானிசாகா் அணையில் இருந்து ஜனவரி 15-ஆம் தேதி வரை நீா் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:-

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணையிலிருந்து, பாசனத்துக்காக ஏற்கெனவே நீா் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில், வியாழக்கிழமை முதல் ஜனவரி 15-ஆம் தேதி வரை தொடா்ந்து நீா் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இதனையேற்று, ஜனவரி 15-ஆம் தேத காலை 8.00 மணி வரை 3 ஆயிரத்து 378.24 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீா் திறந்து விடப்படும்.

இதனால் ஈரோடு, திருப்பூா், மற்றும் கரூா் மாவட்டங்களிலுள்ள ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT