மூடுபனியால் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வரும் வாகனம் 
தமிழ்நாடு

கெங்கவல்லி அருகே மூடுபனி! வாகன ஓட்டிகள் அவதி

காலை 8 மணி ஆகிய நிலையிலும் பனிமூட்டங்கள் அதிக அளவில் கொட்டுவதால் இருள் போல் காணப்படுகிறது. 

DIN

சேலம்: கெங்கவல்லி அருகே காலை நேரத்தில் மூடுபனி கொட்டுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். முகப்பு விளக்கை எரியவிட்டவாறு கடும் குளிருடன் பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் கார்த்திகை மார்கழி தை ஆகிய மூன்று மாதங்களில் ஆண்டுதோறும் இயற்கையாகவே அதிக அளவில் பனிப்பொழிவுகள் ஏற்படுவது வழக்கம்.  அதேபோல் இந்த ஆண்டும் பணிபொலிவுகள் தொடங்கியதை
யடுத்து சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலை கொண்டையம்
பள்ளி ஆகிய பகுதிகளில் மார்கழி மாதத்தையொட்டி கட்நத சில நாட்களாக தொடர்ந்து பனிப்பொழிவுகள் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று காலை 8 மணி ஆகிய நிலையிலும் பனிமூட்டங்கள் அதிக அளவில் கொட்டுவதால் இருள் போல் காணப்படுகிறது. காலையில் அரசு மற்றும் தனியார் பணிகளுக்கு செல்பவர்களும் அப்பகுதியில் உள்ள விவசாயிகளும் பொதுமக்களும் வெளியில் வாகனங்களில் சென்றபோது எதிரே வரும் வாகனங்கள் வருவதே தெரியாமல் வாகன ஓட்டிகள் மின்விளக்கை எரிய விட்டவாறு சென்றனர்.

பனிமூட்டங்கள் இருள் போல் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர். மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகள் மரங்களும் பனிமூட்டங்களால் மூடப்பட்டு இருப்பதே தெரியாத நிலையில் இருள் போல் காணப்படுகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த  காலை நேர பனிமூட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்பட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT