சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 53 ஆவது நினைவு நாளையொட்டி, தமிழக மக்களின் நெஞ்சில் என்றும் நீங்க இடம் பெற்றுள்ள பேரரறிஞர் அண்ணா காட்டிய அறவழியில் பயணிக்க உறிதியேற்போம் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளார்.
இதையும் படிக்க | அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், சமதர்ம சிந்தனை, சமூகநீதி, மொழி உணர்வு, மக்கள் நலம் ஆகியவற்றோடு விசாலமான தனது உள்ளத்தாலும் தமிழக மக்களின் நெஞ்சில் என்றும் நீங்கா இடம் கொண்டுள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளில் அவர் காட்டிய சீரிய சித்தாந்தங்களை பின்பற்றி அவர் காட்டிய அறவழியில் பயணிக்க உறுதியேற்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.