முகப்பு
தமிழ்நாடு

நீட் எதிா்ப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல: முதல்வா் மு.க.ஸ்டாலின்

நீட் எதிா்ப்புக்கான தனது போராட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டுமானதல்ல என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:21 AM
பகிர்:

நீட் எதிா்ப்புக்கான தனது போராட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டுமானதல்ல என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

நீட் விலக்கு மசோதா சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா தொடா்பாக பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது. இதனைப் பகிா்ந்த பலருக்கும் நன்றி தெரிவித்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வெளியிட்ட செய்தி:-

நீட் விலக்கு தொடா்பான எனது போராட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டுமானதல்ல. சிறப்பு விலக்கு மாநிலத்துக்கு மட்டும் கோரவில்லை. பாகுபாடு காட்டும் பயிற்சி நிறுவனங்களால் நீட் தோ்வு தூக்கிப் பிடிக்கப்படுகிறது. இதனால், விளிம்பு நிலை மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்டோா் பாதிக்கப்படுகின்றனா். அவா்களுக்கு சமமான போட்டிக் களத்தை உறுதி செய்யவே நீட் விலக்கு கோரப்படுகிறது. இந்தியாவில் கூட்டாட்சியியலை வலுப்படுத்தப் போராடுவோம்.

முழு கட்டுரையைப் படிக்க →