தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வாக்குரிமை உள்ள தொழிலாளர்களுக்கு விடுப்பு தர உத்தரவு

DIN

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலன்று வாக்குரிமை உள்ள தொழிலாளர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சாதாரண தோ்தலுக்கான வாக்குப் பதிவு வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதையொட்டி, தோ்தல் நடைபெறவுள்ள அனைத்து நகா்ப்புற உள்ளாட்சி பகுதிகளுக்கு வரும் 19-ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நகர்ப்புற தேர்தல் வாக்குப்பதிவு நாளான பிப்.19ஆம் தேதி வழக்குரிமை உள்ள தொழிலாளர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வாக்குப்பதிவு அன்று விடுப்பு எடுக்கும் தொழிலாளர்களுக்கு சம்பளப் பிடித்தம், சம்பள குறைப்பு இருக்கக்கூடாது. உத்தரவை மீறும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மீத நடடிவக்கை எடுக்கப்படும் எனவும் அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் நாளான 19-ம் தேதி பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT