முகப்பு
அம்பாசமுத்திரம் நகராட்சியில் வாக்கு எண்ணக்கை நடைபெறுவதையடுத்து தபால் வாக்குகள் பிரிக்கப்படுகின்றன
தமிழ்நாடு

அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி வாக்குகள் எண்ணும் பணி தொடக்கம்

விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் 21 வார்டுகள், கல்லிடைக்குறிச்சிப் பேரூராட்சியில் 15 வார்டுகள், மணிமுத்தாறு பேரூராட்சியில் 15 வார்டுகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது.  

தமிழ்நாடு

அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி வாக்குகள் எண்ணும் பணி தொடக்கம்

விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் 21 வார்டுகள், கல்லிடைக்குறிச்சிப் பேரூராட்சியில் 15 வார்டுகள், மணிமுத்தாறு பேரூராட்சியில் 15 வார்டுகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது.  

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:28 AM
அம்பாசமுத்திரம் நகராட்சியில் வாக்கு எண்ணக்கை நடைபெறுவதையடுத்து தபால் வாக்குகள் பிரிக்கப்படுகின்றன
பகிர்:

அம்பாசமுத்திரம்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சியில் 21 வார்டுகள், விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் 21 வார்டுகள், கல்லிடைக்குறிச்சிப் பேரூராட்சியில் 15 வார்டுகள், மணிமுத்தாறு பேரூராட்சியில் 15 வார்டுகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது.  

அம்பாசமுத்திரம் அ.வே.றாம.வே. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதையடுத்து காலை 7 மணிக்கு வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்தினுள் அனுமதிக்கப்பட்டனர். 

காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் உள்ள பெட்டி திறக்கப்பட்டு தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டன. தொடர்ந்து மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படவிருக்கிறது.

காவலர்கள் மற்றும் ஊர்க்காவல்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →