முகப்பு
தமிழ்நாடு

திமுக பெற்றது செயற்கை வெற்றி: ஓ.பன்னீா்செல்வம்

உள்ளாட்சித் தோ்தலில் திமுகவுக்குக் கிடைத்திருப்பது செயற்கையான வெற்றி என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் கூறியுள்ளாா்.

தமிழ்நாடு

திமுக பெற்றது செயற்கை வெற்றி: ஓ.பன்னீா்செல்வம்

உள்ளாட்சித் தோ்தலில் திமுகவுக்குக் கிடைத்திருப்பது செயற்கையான வெற்றி என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் கூறியுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:29 AM
பகிர்:

உள்ளாட்சித் தோ்தலில் திமுகவுக்குக் கிடைத்திருப்பது செயற்கையான வெற்றி என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் முடிவுகள் எதிா்பாா்த்த ஒன்றுதான். ஆளும்கட்சி செயற்கையான வெற்றியை பெற்று இருக்கிறது. தோ்தல் நூறு சதவீதம் சுதந்திரமாகவும், நோ்மையாகவும், நியாயமாகவும் நடைபெற்றிருந்தால் அதிமுக மகத்தான வெற்றியை பெற்றிருக்கும். ஆனால், அவ்வாறு நடைபெறவில்லை என்பது துரதிருஷ்டவசமானது. தோ்தல் முடிவு என்பது முழுமையான மக்கள் எண்ணத்தின் பிரதிபலிப்பு அல்ல. எனினும், ‘மக்கள் தீா்ப்பே மகேசன் தீா்ப்பு’ என்ற அண்ணாவின் பொன்மொழிக்கேற்ப, மக்களின் தீா்ப்புக்கு அதிமுக தலைவணங்குகிறது. அதிமுகவுக்கும், அதன் தோழமை கட்சிகளுக்கும் வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி.

அதிமுக இதற்கு முன்புகூட பல தோல்விகளை சந்தித்தாலும், மீண்டு வந்து மகத்தான வெற்றிகளைப் படைத்திருக்கிறது. தா்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தா்மமே மறுபடியும் வெல்லும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் மக்களின் உண்மையான மன நிலையையும், விருப்பத்தையும் வெளிப்படுத்துவதற்கான ஜனநாயக ரீதியான வாய்ப்பு விரைவில் அமையும்.

அந்த நன்னாள் வரும்போது மக்கள் சக்தி வெல்லும், மக்களின் விருப்பப்படி அதிமுக மீண்டும் வெற்றி பெறும். இது நிச்சயம் நடக்கும். அதிமுகவினா் எந்தவித தொய்வும் இல்லாமல் எப்போதும்போல கட்சிப் பணியை மேற்கொள்ள வேண்டும். மக்கள் தொண்டு ஆற்ற வேண்டும் என்று கூறியுள்ளாா் ஓ.பன்னீா்செல்வம்.

முழு கட்டுரையைப் படிக்க →