முகப்பு
தமிழ்நாடு

ஈரோடு மாநகராட்சியில் திமுக கூட்டணி 15 வார்டுகளில் வெற்றி

ஈரோடு மாநகராட்சியில் 15 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:28 AM
பகிர்:

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் 15 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 60 வார்டுகளில் திமுக வேட்பாளர் ஒருவர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். 59 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டது.

இதில் காலை 11 மணி வரை 10 வார்டுகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் அனைத்திலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

1ஆவது வார்டு ஜமுனாராணி -திமுக, 5ஆவது வார்டு கௌசல்யா -திமுக, 10 ஆவது வார்டு குமரவேல் -கொமதேக, 34ஆவது வார்டு ரேவதி -திமுக, 43ஆவது வார்டு சபுராமா -காங்கிரஸ், 38ஆவது வார்டு மகேஸ்வரி -காங்கிரஸ், 52ஆவது வார்டு சாந்தி -திமுக, 48ஆவது வார்டு சிவஞானம் -சிபிஎம், 19 ஆவது வார்டு மணிகண்டராஜா -திமுக, 20 ஆவது வார்டு மோகன்குமார் -திமுக, 12ஆவது வார்டு வினோத்குமார் -திமுக, 8ஆவது வார்டு ஆதிஸ்ரீதர் -திமுக, 39 ஆவது வார்டு கீதாஞ்சலி -திமுக.. வெற்றி பெற்றுள்ளனர். 

இதையடுத்து 12 மணி வரை 15 வார்டுகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் 15 வார்டுகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.