முகப்பு
தமிழ்நாடு

வேதாரண்யம் நகராட்சி: ஒற்றை ஆளாய் நின்று வென்ற சுயேச்சை

நாகை மாவட்டம், வேதாரண்யம் நகர்மன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, ஒற்றை ஆளாய் களத்தில் நின்றவர் 95 வாக்குகள் கூடுதல் வாக்குகள் பெற்று வென்றுள்ளார்.

Updated On : 22 பிப்ரவரி 2022, 12:56 pm IST
சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற சிவ.மயில்வாகனனுக்கு சான்றிதழ் வழங்கும் அலுவலர். 
பகிர்:

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் நகர்மன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, ஒற்றை ஆளாய் களத்தில் நின்றவர் 95 வாக்குகள் கூடுதல் வாக்குகள் பெற்று வென்றுள்ளார்.

வேதாரண்யம் நகர்மன்றத் தேர்தலில் 13 ஆவது வார்டில் சுயேச்சையாக களம் கண்டவர் சிவ.மயில்வாகனன். நண்பர்கள் உதவியோடு, மிதிவண்டியில் ஒலிபெருக்கையை வைத்துக்கொண்டு பிரசாரம் செய்தார்.

இவரை எதிர்த்து அதிமுக, காங்கிரஸ் மற்றும் அரசியல் கட்சிகளின் போட்டி வேட்பாளர்கள் களம் கண்டனர். 

Advertisement

Advertisement

இதில், சிவ.மயில்வாகனன் 95 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.