தமிழ்நாடு

குன்றத்தூர், மாங்காடு நகராட்சிகளில் வெற்றிபெற்ற கணவன்கள், மனைவிகள்

DIN

ஸ்ரீபெரும்புதூர்: குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிகளில் திமுக, அதிமுக, மதிமுக, சார்பாக போட்டியிட்ட கணவன்கள் மற்றும் மனைவிகள் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் குன்றத்தூர் நகராட்சியில் திமுக சார்பில் 18ஆவது வார்டில் போட்டியிட்ட சத்தியமூர்த்தியும், 17ஆவது வார்டில் போட்டியிட்ட சத்தியமூர்த்தியின்  மனைவி பானுசத்தியமூர்த்தியும் வெற்றி பெற்றுள்ளனர்.

அதேபோல் மாங்காடு நகராட்சியில், மதிமுக சார்பில் 9ஆவது வார்டில் போட்டியிட்ட முருகனும், 6ஆவது வார்டில் போட்டியிட்ட முருகனின் மனைவி சுமதியும் வெற்றி பெற்றனர். அதேபோல் மாங்காடு நகராட்சியில் அதிமுக சார்பில் 12ஆவது வார்டில் போட்டியிட்ட ரூசேந்திரகுமாரும், 16ஆவது வார்டில்  போட்டியிட்ட ரூசேந்திரகுமாரின் மனைவி வாணியும் வெற்றி பெற்றுள்ளனர்.

மேலும், மாங்காடு நகராட்சியில் திமுக சார்பில் 25ஆவது வார்டில் போட்டியிட்ட ஜபருல்லாவும், 27ஆவது வார்டில் போட்டியிட்ட ஜபருல்லாவின் மனைவி யாஷ்மினும் வெற்றி பெற்றுள்ளனர்.

குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிகளில் மட்டும் 4 கணவன்களும் அவர்களது மனைவிகளும் வெற்றி  பெற்ற ருசிகர சம்பவம் நடைபெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

SCROLL FOR NEXT