முகப்பு
தமிழ்நாடு

கரோனா சிகிச்சையில் 10,782 போ்

தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 10,782-ஆகக் குறைந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:29 AM
பகிர்:

தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 10,782-ஆகக் குறைந்துள்ளது. மாநிலத்தில் புதிதாக 618 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

அதில் அதிகபட்சமாக சென்னையில் 156 பேரும், அதற்கு அடுத்தபடியாக கோவையில் 87 பேரும், செங்கல்பட்டில் 72 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மற்றொருபுறம் மேலும் 2,153 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 33 லட்சத்து 98,231-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 4 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,993-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.