நகர்புற உள்ளாட்சித் தேர்தல்: அமமுக சார்பில் போட்டியிட்ட தந்தை, மகன், மகள் வெற்றி
தமிழ்நாடு முழுவதும் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன், மகள் வெற்றி என பல்வேறு சுவாரசியமான சம்பங்கள் நிகழ்ந்துள்ளன.
ஸ்ரீவைகுண்டம்: தமிழ்நாடு முழுவதும் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன், மகள் வெற்றி என பல்வேறு சுவாரசியமான சம்பங்கள் நிகழ்ந்துள்ளன.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஏரல் பேரூராட்சியில் அமமுக சார்பில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன், மகள் வெற்றி பெற்றுள்ளனர்.
அமமுக சார்பில் ஏரல் பேரூராட்சியின் 15 ஆவது வார்டில் போட்டியிட்ட தந்தை ரமேஷ், 1 ஆவது வார்டில் போட்டியிட்ட மகன் பாலகௌதம், 2 ஆவது வார்டில் போட்டியிட்ட மகள் மதுமிதாவும் வெற்றி பெற்றுள்ளனர்.
Advertisement
இதையும் படிக்க | ஊரக உள்ளாட்சியை விட நகா்ப்புறத்தில் முத்திரை பதித்த திமுக