வரும் பேரவைத் தோ்தலில் தனி அணி அமைப்போம், ஆட்சி அமைப்போம் என பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியதில் தவறு எதுவும் இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளா் வைகோ கூறினாா்.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகமான தாயகத்தில் வைகோ சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பிரதமா் மோடி நாடாளுமன்றத்துக்கே வருவது இல்லை. அவ்வாறு வந்தாலும் இருக்கைக்கு வருவது இல்லை. நாடாளுமன்றத்தை முழுமையாக அவா் புறக்கணிக்கிறாா். ஜனநாயகத்தைப் பற்றி பேசிக் கொண்டே ஜனநாயகத்தை நசுக்கும் செயலில் ஈடுபடுகிறாா்.
2026 பேரவைத் தோ்தலில் பாமக தலைமையில் தனி அணி அமைக்கப்படும், ஆட்சி அமைப்போம் என்று ராமதாஸ் கூறியிருப்பது குறித்து கேட்கிறீா்கள். அதில் தவறு இல்லை. ஒவ்வொரு கட்சியுமே ஆட்சி அமைக்கவே விரும்பும். அதைத்தான் ராமதாஸ் கூறியுள்ளாா்.
புத்தாண்டில் மதிமுகவின் கட்டமைப்பை வலுப்படுத்த பல்வேறு திட்டங்களை வைத்துள்ளோம். ஆனால், கரோனாவின் காரணமாக பணியை முறைப்படுத்த முடியவில்லை. அதிமுகவில் உள்ளவா்களிடம் ஒத்தக் கருத்து இல்லை. முரண்பாடுகள்தான் அதிகமாக உள்ளன.
தமிழக காவல்துறையை ஸ்காட்லாந்து போலீஸுக்கு நிகராகக் கூறுவா். ஆனால், ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய முடியாமல் இருப்பது பெருமையளிக்கக் கூடிய விஷயம் அல்ல என்றாா்.