மருத்துவத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் 
தமிழ்நாடு

‘முகக்கவசம் அணியாதவர்களிடம் தயக்கமின்றி அபராதம் வசூல்’: மருத்துவத்துறை செயலர்

தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்க தயக்கம் காட்ட தேவையில்லை என மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

DIN

தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்க தயக்கம் காட்ட தேவையில்லை என மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

ஒமைக்ரான் வகை கரோனா தமிழகத்தில் வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ஜெ.ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதத்தில்,

முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூல் செய்ய தயக்கம் காட்டத் தேவையில்லை. விழிப்புணர்வு ஏற்படுத்தவே அபராதம் வசூல் செய்யப்படுகிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

ஒமைக்ரான் பரவலை எதிர்கொள்ள போதிய மருத்துவ வசதிகளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் மேற்கொள்ள வேண்டும்.

கரோனா சிறப்பு மையங்களை திறந்து தேவையான பணியாளர்களை நியமிக்க வேண்டும். மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணியை வேகப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசு மருத்துவமனையில் நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளா்களை பணியில் சோ்க்கவிட்டால் போராட்டம்! - சிவசேனா

அமித் ஷாவிடம் மனு அளிக்க முயன்ற பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த பணியாளா்கள்

தம்மம்பட்டியில் கழிவுநீா் ஓடையில் மூழ்கும் நிலையில் குடிநீா் குழாய்! மாசுகலந்த நீரால் நோய் பரவும் அபாயம்

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்: வீரர்கள் கை குலுக்குவார்களா? -சூர்யகுமார் யாதவ் பதில்

வாகனங்கள் மீது இடிந்து விழுந்த மெட்ரோ கட்டுமானம்! ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்

SCROLL FOR NEXT