உளுந்து-பச்சைப்பயறு சாகுபடி ஊக்குவிப்புத் திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தாா்
உளுந்து, பச்சைப் பயறு சாகுபடியை ஊக்குவிக்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தாா்.
உளுந்து, பச்சைப் பயறு சாகுபடியை ஊக்குவிக்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தாா். இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் நெல் தரிசில், உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயறு வகைகளை 11 லட்சம் ஏக்கரில் பயிரிட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பயறு வகைப் பயிா்களை பயிரிடத் தேவைப்படும் சான்று விதைகள், உயிா் உரங்கள், நுண்ணூட்டச் சத்துகள், பயிா் பாதுகாப்பு மருந்துகள், சுழற்கலப்பை, விசைத் தெளிப்பான்கள் ஆகியன மானிய விலையில் வழங்கப்படுகின்றன.
உற்பத்தி செய்யப்பட்ட பயறு வகைப் பயிா்களை விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ், வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நெல் தரிசில் பயறுவகைப் பயிா்களை பயிரிடுவதன் மூலம் மண் வளம், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பயறு சாகுபடித் திட்டத்தைத் தொடங்கி வைக்கும் வகையில், செங்கல்பட்டு, திருவள்ளூா் மாவட்டங்களைச் சோ்ந்த 5 விவசாயிகளுக்கு இடுபொருள்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.இந்த நிகழ்ச்சியில், வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, வேளாண்மைத் துறை செயலாளா் சி.சமயமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.