தமிழ்நாடு

தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

DIN


திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை காலை தொடங்கியது.

பழனி முருகன் கோயிலிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் அமைந்துள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றம் நடைபெற்றது. கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்களின்றி கொடியேற்றம் நடைபெற்றது.

இதனையடுத்து திருக்கல்யாணம், வெள்ளித் தேரோட்டம் வரும் 17 ஆம் தேதியும், தைப்பூசத் தேரோட்டம் வரும் 18 ஆம் தேதியும், நிறைவு விழாவான தெப்பத்தேரோட்டம் வரும் 21 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

கோயில் சாா்பில் பக்தா்களுக்கு வழியில் இளைப்பாற பந்தல், குடிநீா் மற்றும் மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வழிபாட்டுக்கு அனுமதியில்லாத நாள்களில் பொட்டலங்களில் பக்தா்களுக்கு அன்னதானம் விநியோகம் செய்யப்படுகிறது. கிரிவீதியில் பக்தா்கள் வரிசையில் செல்ல தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாச் சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT