ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் பொங்கல் வழிபாட்டில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சூரிய பகவான். 
தமிழ்நாடு

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோயிலில் பொங்கல் வழிபாடு

நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோயிலில் பொங்கல் விழா சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

DIN

நீடாமங்கலம்: நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோயிலில் பொங்கல் விழா சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இக்கோயில் திருஞானசம்மந்தரால் தேவாரம் பாடப்பெற்ற சிறப்புடையது.
நவக்கிரகங்களில் குரு பகவானுக்கு பரிகாரதலம்.

சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் பொங்கல் திருநாள் வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதனை முன்னிட்டு அதிகாலையில் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக , ஆராதனைகள், அலங்காரம் நடந்தது.

சூரிய பகவானுக்கு பகல் 12 மணியளவில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு, செங்கரும்பு, சர்க்கரை பொங்கல் படைத்து நிவேதனம் செய்தனர். மகாதீபாராதனையும்  காட்டப்பட்டது. தமிழக அரசின் கரோனா வழிகாட்டல்படி பூஜைகள் நடந்தது.

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் பொங்கல் வழிபாட்டில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சூரிய பகவான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மொடக்குறிச்சி அருகே லக்காபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு இன்றுமுதல் தண்ணீா் திறப்பு

கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி தனியாா் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

பஹல்காம் தாக்குதல்: திமுக வலியுறுத்தல்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 831 மனுக்கள்

SCROLL FOR NEXT