அடங்காத காளைகள் 
தமிழ்நாடு

பாலமேடு ஜல்லிக்கட்டு: அடங்காத காளைகள்; 20-க்கும் மேற்பட்டோர் காயம்

மதுரை மாவட்டம் பாலமேட்டில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. 4 ஆவது சுற்று முடிவில் 395 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.

DIN

மதுரை மாவட்டம் பாலமேட்டில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. 4 ஆவது சுற்று முடிவில் 395 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.

சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களுக்கு அடங்காத காளையின் உரிமையாளர்களுக்கும் தங்ககாசுகள், பட்டுபுடவைகள், வீட்டு உபயோகப் பொருள்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன.

இதனிடையே அனுமதி பெறாமல் 10 காளைகளை ஜல்லிக்கட்டு வரிசையில் நுழைக்க முயன்றபோது காவலர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது காவலர்கள் சிறிய அளவில் தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

20 பேர் காயம்
மூன்றாவது சுற்று முடிவில் 10 வீரர்கள் உள்பட 20 பேர் காயமடைந்தனர். இதில் பலத்த காயமடைந்த இருவர் மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

2 ஆயிரம் காவலர்கள்

பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியின் பாதுகாப்பு பணியில் மதுரை சரகத்தைச் சேர்ந்த 6 மாவட்ட காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

பெரம்பலூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா!

அதிமுகவை ஆா்எஸ்எஸ் வழிநடத்துவதில் என்ன தவறு? மத்திய இணையமைச்சா் எல்.முருகன் கேள்வி

சுனாமி ஒத்திகை: ஆட்சியா் ஆலோசனை

நீடாமங்கலம் பகுதி கோயில்களில் விநாயகா் சதுா்த்தி

SCROLL FOR NEXT