முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு குறைப்பு

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
மேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு குறைப்பு
பகிர்:

சேலம்: மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 8,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.71 அடியிலிருந்து 114.21 அடியாக சரிந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.  இது தற்போது 8 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 600கன அடியிலிருந்து 300 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. 

அணைக்கு வரும் நீரின் அளவு  வினாடிக்கு 2154 கன அடியிலிருந்து 1926 கன அடியாக சரிந்துள்ளது.  அணையின் நீர் இருப்பு 84.53 டி.எம்.சி.யாக இருந்தது.
 

முழு கட்டுரையைப் படிக்க →