திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு
கர்நாடக மாநிலத்தில் இருந்து மரத்துண்டு பாரம் ஏற்றி வந்த லாரி திம்பம் மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால் தமிழகம், கர்நாடகம் இரு மாநிலங்களுக்கு இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளத
கர்நாடக மாநிலத்தில் இருந்து மரத்துண்டு பாரம் ஏற்றி வந்த லாரி திம்பம் மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால் தமிழகம், கர்நாடகம் இரு மாநிலங்களுக்கு இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது.
கர்நாடக மாநிலம் குஷால் நகர் பகுதியிலிருந்து கோவில்பட்டிக்கு மரக்கட்டை பாரம் ஏற்றிய லாரி திம்பம் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தது. இன்று காலை 6 ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்தது.
Advertisement
இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். லாரி மலைப் பாதையின் நடுவே கவிழ்ந்ததால் மலைப்பாதையில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
தகவலறிந்த சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். சத்தியமங்கலத்தில் இருந்து கிரேன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு லாரி மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதன்காரணமாக திம்பம் மலைப்பாதையில் லாரி உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.