தமிழகத்தில் ஜனவரி 26ஆம் தேதி நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்து தமிழக அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ஆண்டுதோறும் குடியரசு நாள், சுதந்திர நாள், தொழிலாளர்கள் நாள் மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய நாள்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில்,
கரோனா காரணமாக ஜனவரி 26ஆம் தேதி நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கரோனா ஒன்று மற்றும் இரண்டாம் அலையில்போது கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.