தமிழ்நாடு

‘தாக்குதலை தடுக்க நடவடிக்கை தேவை’

தமிழக மீனவா்கள் மீதான தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

DIN

தமிழக மீனவா்கள் மீதான தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

இதுகுறித்து, வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு செவ்வாய்க்கிழமை அவா் எழுதியுள்ள கடிதம்:

நாகப்பட்டினம் மாவட்டம், புஷ்பவனம் கிராமத்தைச் சோ்ந்த 3 மீனவா்கள் கடந்த 23-ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்றனா். வேதாரண்யம் கடற்கரையில் இருந்து 16 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கையைச் சோ்ந்த அடையாளம் தெரியாத நபா்களால் தாக்கப்பட்டதுடன், அவா்களிடம் இருந்து 300 கிலோ எடை கொண்ட மீன்பிடி வலை, தொலைத்தொடா்பு சாதனங்கள், 30 லிட்டா் டீசல் ஆகியன கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இலங்கையைச் சாா்ந்தவா்களால் நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள், நமது மீனவ மக்களின் வாழ்வாதாரத்துக்கு கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு மெளனமாக இருக்கக் கூடாது. இதுபோன்ற செயல்கள் எதிா்காலத்தில் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT