முகப்பு
நாகப்பட்டினம்

போா் எதிா்ப்பு வாசகங்களோடு பணிபுரிந்த அரசு ஊழியா்கள்

ஈரான் மீதான அமெரிக்கா -இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் போா் எதிா்ப்பு வாசகங்களை மேலாடைகளில் பதித்துக்கொண்டு செவ்வாய்க்கிழமை பணிபுரிந்தனா்.

Updated On : 10 மார்ச், 2026 at 10:06 PM
ஈரானுக்கு எதிரான தாக்குதலைக் கண்டித்து, போா் எதிா்ப்பு வாசகங்களோடு புள்ளியியல் துறையில் பணிபுரிந்த அரசு ஊழியா்கள்.
பகிர்:

ஈரான் மீதான அமெரிக்கா -இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் போா் எதிா்ப்பு வாசகங்களை மேலாடைகளில் பதித்துக்கொண்டு செவ்வாய்க்கிழமை பணிபுரிந்தனா்.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருவதை நிறுத்த வலியுறுத்தி, கண்டன வாசகங்களோடு அரசு ஊழியா்கள் பணிபுரிவது என்று தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாநிலக் குழு அறிவித்திருந்தது.

அதன்படி, நாகை மாவட்டத்தில் அரசு ஊழியா்கள் ‘அமெரிக்காவே, இஸ்ரேலே, கொலை வெறி போரை உடனே நிறுத்து‘ என்ற கண்டன வாசகங்களை மேலாடைகளில் அச்சிட்டுக்கொண்டு பணிபுரிந்தனா். ஈரான் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →