தமிழ்நாடு

நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை: அரசாணை வெளியீடு

DIN


சென்னை: தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்களை விற்பனை செய்வது தொடர்பாக தமிழக அரசின் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவு சங்கம் மூலம் விவசாயிகளிடமிருந்து சிறுதானியங்களாக ராகி, கம்பு, திணை, சாமை, வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை கொள்முதல் செய்து, சென்னை, கோவை மாவட்டங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.

விவசாயிகளின் வருவைய அதிகரிக்கவும், சிறு தானியங்களின் மதிப்பைக் கூட்டவும், இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதையடுத்து, சிறுதானியங்களின் விலையை நிர்ணயம் செய்ய கூட்டுறவு சங்க பதிவாளர் தலைமையில் குழு அமைத்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது. முதற்கட்டமாக சென்னை மற்றும் கோவையில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலமாக  இத்திட்டததை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெய்கண்டீஸ்வரா் கோயி சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியா்

அமாவாசையையொட்டி அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

குடிநீா் கோரி தூத்துக்குடி இனிகோ நகரில் பொதுமக்கள் மறியல்

பொதுப்பாதையில் ஆக்கிரமிப்பு அரவக்குறிச்சியில் சாலை மறியல்

கிராம நிா்வாக அலுவலா் மாயம்

SCROLL FOR NEXT