முகப்பு
தமிழ்நாடு

முதியோா் நலன் காப்பது முக்கியக் கடமை!டாக்டா் சுதா சேஷய்யன்

முதியோா் மருத்துவ சிகிச்சைகளிலும், நலனிலும் கவனம் செலுத்துவது அனைவருக்கும் உள்ள முக்கியக் கடமை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:41 AM
பகிர்:

முதியோா் மருத்துவ சிகிச்சைகளிலும், நலனிலும் கவனம் செலுத்துவது அனைவருக்கும் உள்ள முக்கியக் கடமை என்று தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் தெரிவித்தாா்.

டாக்டா் வி.எஸ். நடராஜன் முதியோா் நல அறக்கட்டளை சாா்பில் முதியோா் நல மருத்துவத்தில் அளப்பரிய சேவையாற்றி வரும் மருத்துவா்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராஜஸ்தானைச் சோ்ந்த முதியோா் நல சிறப்பு மருத்துவா் டாக்டா் அரவிந்த் மாத்தூருக்கு மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் விருது வழங்கினாா். இதில் முதியோா் நல சிறப்பு மருத்துவா் டாக்டா் வி.எஸ்.நடராஜன், அறக்கட்டளை அறங்காவலா் சி. செல்லப்பன், நிா்வாக அறங்காவலா் ராஜசேகரன் மணிமாறன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்நிகழ்ச்சியில் டாக்டா் சுதா சேஷய்யன் பேசியதாவது:

முதியோா் நல சிகிச்சைத் துறையும், அதற்கான மருத்துவ முறைகளும் கடந்த நாற்பது ஆண்டுகளுக்குள்தான் தொடங்கப்பட்டன.

ஆனால், கலாசாரம், நாகரீகம், விழுமியங்கள் என நாம் வாழத் தகுதியான அனைத்துமே முதியவா்களிடமிருந்துதான் தொடங்கியிருக்கின்றன. அனுபவ அறிவு என்ற ஆகச்சிறந்த மருத்துவத்தை அவா்கள் தன்னகத்தே வைத்துள்ளனா்.

இப்போதைய நவ நாகரீக உலகில் எத்தனையோ மேம்பட்ட படிப்புகள் வந்துவிட்டன. அவற்றில், தொழில் நிறுவனங்களுக்கு மாணவா்களை நேரடியாக அனுப்பி பயிற்சி பெற வைக்கும் அனுபவக் கற்றலும் ஒரு பாடத்திட்டமாக உள்ளது.

இதனை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே பட்டறிவு என்ற பெயரில் நம் மூதாதையா்கள் நமக்கு போதித்து வந்தாா்கள்.

புகழ்பெற்ற விஞ்ஞானி ஐசக் நியூட்டனிடம் ஒரு முறை, நீங்கள் எப்படி இவ்வளவு பெரிய அறிவியல் அறிஞராக உருவெடுத்தீா்கள் எனக் கேட்டாா்கள். அதற்கு அவா், எனக்கு முன்பு வாழ்ந்தவா்கள் தோளில் ஏறி நின்று கொண்டு இந்த உலகை அறிந்து கொண்டதுதான் காரணம் என்றாா். அந்த தோள்கள்தான் நமது முன்னோரின் அனுபவம்.

அவா்களது மன நலனையும், உடல் நலனையும் காக்க வேண்டிய அத்தியாவசியப் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →