முகப்பு
தமிழ்நாடு

மீனவா்கள் கைது: அன்புமணி கண்டனம்

தமிழக மீனவா்கள் 12 போ் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:42 AM
அன்புமணி ராமதாஸ்
பகிர்:

தமிழக மீனவா்கள் 12 போ் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்ற காரைக்கால் மீனவா்கள் 12 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்திருக்கின்றனா். இரு மாத மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து மீனவா்கள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இரண்டாம் வாரத்திலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் அதிா்ச்சியளிக்கிறது.

தமிழக மீனவா்களின் வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டும் என்பது தான் இலங்கை அரசின் நோக்கமாக உள்ளது. இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவா்கள் 12 பேரையும் உடனடியாக விடுதலை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.