தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ‘க்யூஆர் கோட்’ அடையாள அட்டை

DIN

அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்கவுள்ள உறுப்பினர்களுக்கு ‘க்யூஆர் கோட்’ தொழில்நுட்ப வசதியுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில், ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.

இந்நிலையில், பொதுக்குழு அல்லாத நபர்கள் மண்டபத்திற்குள் நுழைவதை தடுக்க நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ‘க்யூஆர் கோட்’ அடையாள அட்டை அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

மண்டபத்திற்கு வெளியே அடையாள அட்டையை சரிபார்த்த பிறகே உறுப்பினர்கள் கூட்டத்திற்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.

கடந்த ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் போலி அடையாள அட்டையுடன் மர்ம நபர்கள் பொதுக்குழுவுக்கு வந்ததாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இந்த ஏற்பாட்டை கட்சித் தலைமை செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT