தமிழ்நாடு

வயலில் திருவள்ளுவர் திருவுருவத்தில் நடவு செய்த விவசாயி!

DIN


இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பரிய நெல் சாகுபடி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வயலில் திருவள்ளுவர் திருவுருவத்தில் நடவு செய்துள்ளார் தஞ்சை விவசாயி. 

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, மலையப்பநல்லூரைச் சேர்ந்தவர் இளங்கோவன். இயற்கை விவசாயி. இவர் இயற்கை விவசாயத்தை போற்றும் வகையில், உழவுக்கென்று தனி அதிகாரம் கொடுத்து உலக மக்களுக்கு உழவுத் தொழிலின் சிறப்பை உணர்த்திய திருவள்ளுவரை சிறப்பிக்கும் வகையில், அவரது உருவத்தை கொண்டு நடவு செய்துள்ளார்.

சின்னார் என்ற நெல் ரகத்தினாலும், மைசூர் மல்லி என்ற நெல் ரகத்தினாலும், 50 அடி நீளமும், 45 அடி அகலமும் கொண்ட திருவள்ளுவரின் உருவ அமைப்பில் விளைநிலத்தில் நடவு செய்துள்ளார். 

இதனைக் கழுகுப் பார்வையில் பார்க்கும்போது திருவள்ளுவர் அமர்ந்திருக்கும் நிலையிலான முழு உருவத்தை காட்டுகிறது என்பது சிறப்பம்சம். 

வயலில் திருவள்ளுவர் உருவத்தை உருவாக்கிய விவசாயிக்கு அரசு தலைமை கொறடா கோவி செழியன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். 

இது குறித்து இயற்கை விவசாயி இளங்கோவன் கூறுகையில், நான் இயற்கை விவசாயத்தை கடந்த 10 ஆண்டுகளாக செய்து வருகிறேன். ஒவ்வோர் ஆண்டும் வித்தியாசமாக தொடர்ந்து செய்து வந்தேன்.

அதுபோல இந்த ஆண்டும் 2000 ஆண்டுகளுக்கு  முன்பு திருவள்ளுவர் இயற்றிய மொத்த குறள்களில் 11 குறள்கள் இயற்கை விவசாயம் பற்றி எழுதி உள்ளார். அதன் தாக்கமாக அதே இயற்கை விவசாயத்தை நாங்களும் செய்கிறோம் என்ற சந்தோஷத்தில், திருவள்ளுவரின் உருவத்தை வயலில் நடவு செய்ய கடந்த ஆண்டு முதல் நினைத்து வந்தேன். அதனைத் தொடர்ந்து  இதனைக் கடந்த 5 நாள்களாக நான் தனி ஆளாக நின்று நட்டுள்ளேன். 

இதனைத் தொடர்ந்து எனது அடுத்த முயற்சியாக நம்மாழ்வார், நெல் ஜெயராமன் போன்ற முன்னோடி விவசாயிகளின் உருவ அமைப்பை வயலில் நட உள்ளேன் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT