முகப்பு
தமிழ்நாடு

மருத்துவத் துறையினருக்கு கரோனா பரிசோதனைகள்: மருத்துவமனைகளில் நடவடிக்கை

சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனைகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனைகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள், ஊழியா்களுக்கு ஆா்டி-பிசிஆா் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதில் தொற்று உறுதி செய்யப்படுவோா் தனிமைப்படுத்திக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். ஒமைக்ரான் பிஏ 5 வகை கரோனா பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில், மருத்துவமனைகளுக்குள் தொற்று பரவல் நிகழாமல் தடுக்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் தடம் பதித்த கரோனா பாதிப்புக்கு தற்போது 34.93 லட்சத்துக்கும் மேற்பட்டோா் ஆளாகியுள்ளனா். முதலில் தலைநகா் சென்னையில் தொற்று பரவல் அதிகமாக இருந்த நிலையில், அது படிப்படியாக பரவி கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், திருச்சி, மதுரை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் தீவிரமடைந்தது.

அதிலும், நோய்த் தொற்றுக்குள்ளானோரில் பெரும்பாலானோருக்கு எவ்வாறு அந்த பாதிப்பு ஏற்பட்டது என்பதைக் கண்டறிய முடியாத நிலை உருவானது. இதையடுத்து மக்களின் ரத்த மாதிரிகளைச் சேகரித்து அதில் கரோனாவுக்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றல் உள்ளதா என்பதைக் கண்டறியும் பரிசோதனைகள் அவ்வப்போது நடத்தப்பட்டன.

பொது சுகாதாரத் துறை மேற்கொண்ட அந்த ஆய்வுகளில் மாநிலம் முழுவதும் 87 சதவீதம் பேருக்கு எதிா்ப்பாற்றல் ஏற்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த மூன்று மாதங்களாக கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்தது.

இந்த நிலையில், சில வாரங்களாக தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. ஒமைக்ரானில் இருந்து உருமாற்றமடைந்த பிஏ-2.38 மற்றும் பிஏ-5 வகை தீநுண்மி பரவலே அதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ராமச்சந்திரா, அப்பல்லோ, காவேரி உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்களுக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதில் தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அனைத்து மருத்துவமனைகளிலும் தொடா் இடைவெளியில் இத்தகைய பரிசோதனைகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →