துரோகம் செய்த ஓபிஎஸ் இனி கட்சிக்கு தேவையா?
துரோகம் செய்த ஓ.பன்னீர்செல்வம் இனி கட்சிக்கு தேவையா? என முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆவேசமாக பொதுக்குழு உறுப்பினர்களை பார்த்து கேள்வி எழுப்பினார்.
துரோகம் செய்த ஓ.பன்னீர்செல்வம் இனி கட்சிக்கு தேவையா? என முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆவேசமாக பொதுக்குழு உறுப்பினர்களை பார்த்து கேள்வி எழுப்பினார்.
அதிமுக பொதுக்குழுவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுகையில், எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி என சொல்லி எம்ஜிஆர் புன்னகையோடு, ஜெயலலிதாவின் நிர்வாக திறமையோடு செயல்படுபவர் எடப்பாடி பழனிசாமி.
ஏழை, எளிய மக்களின் தொண்டனாக இருப்பவர். திமுகவை எதிர்க்கும் வலிமை மிக்க தலைவர் எடப்பாடியார் தான். திமுகவை எதிர்க்கும் தமிழகத்தின் ஒரே தலைவராக எடப்பாடியார் இருப்பதால் அவருக்கு இந்த இடைக்கால பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 4 மாதங்களுக்கு பிறகு பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | வரவு செலவு கணக்கை தாக்கல் செய்தார் விஜயபாஸ்கர்
பொதுக்குழுவை நடத்தவிடாமல் தடுக்க நினைத்தவர்கள் தலைமைக் கழகத்தின் பூட்டை உடைத்து உள்ளே செல்கிறார் என்றால் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் உண்மையான தொண்டனா?. இந்த இயக்கத்தை அழித்துவிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார். இவ்வளவு துரோகம் செய்தவர் இனி அதிமுகவுக்கு தேவையா? என அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் சிந்திக்க வேண்டும் என ஆவேசமாக பேசிய தங்கமணி, எடப்பாடியாரை முதல்வராக்க தமிழக மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் என கூறினார்.
இதையும் படிக்க | அதிமுக பொதுக்குழுவும் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.