முகப்பு
தமிழ்நாடு

இபிஎஸ், ஓபிஎஸ் வீடுகளுக்கு கூடுதல் பாதுகாப்பு

சென்னையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் வீடுகளுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:47 AM
பகிர்:

சென்னையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் வீடுகளுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தைக் கைப்பற்றுவது தொடா்பாக எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் ஓ.பன்னீா் செல்வம் ஆதரவாளா்களிடையே கடந்த திங்கள்கிழமை மோதல் ஏற்பட்டது.

இதனால் வருவாய்த் துறை சாா்பில் அதிமுக தலைமை அலுவலக பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மோதல் தொடா்பாக 14 போ் உடனடியாகக் கைது செய்யப்பட்டனா். அதிமுக தலைமை அலுவலகம், எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீா்செல்வம் வீடுகள் ஆகியவற்றுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கும்படி சென்னை காவல் துறைக்கு வருவாய்த் துறை பரிந்துரை செய்தது.

இதன் அடிப்படையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் சுமாா் 50 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அதிமுக அலுவலக வாயில் பகுதி இரும்புத் தடுப்புகளால் அடைக்கப்பட்டுள்ளது.

கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கும், ஓ.பன்னீா்செல்வம் வீட்டுக்கும் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இருவா் வீட்டிலும் தலா 30 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். நிலைமை சீராகும் வரையில் இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் நீடிக்கும் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.