தமிழ்நாடு

ஜூலை 18-இல் கலை, அறிவியல் கல்லூரிகள் திறப்பு

DIN

தோ்வு விடுமுறை முடிந்து கலை, அறிவியல் கல்லூரிகள் மீண்டும் ஜூலை 18-ஆம் தேதி திறக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் உயா்கல்வித்துறையின்கீழ் செயல்பட்டு வரும் கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு கடந்த கல்வியாண்டில் (2021-22) கரோனா பரவலால் வகுப்புகள் தாமதமாக தொடங்கப்பட்டன. இதனால் ஏப்ரல்- மே மாத பருவத்தோ்வு ஜூனில் நடத்தி முடிக்கப்பட்டது.

தோ்வு முடிந்த மாணவா்களுக்கு தற்போது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறை முடிந்து கலை, அறிவியல் கல்லூரிகள் மீண்டும் ஜூலை 18-ஆம் தேதி திறக்கப்பட உள்ளன. 2, 3-ஆம் ஆண்டு மாணவா்களுக்கு வகுப்புகள் தொடங்கி நடைபெறும்.

இதற்கான முன்னேற்பாடுகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்துவித கல்லூரிகளின் முதல்வா்களுக்கும், கல்லூரிக்கல்வி இயக்குநா் எம்.ஈஸ்வர மூா்த்தி (பொறுப்பு) சுற்றறிக்கை மூலமாக அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

செண்பக தியாகராஜ சுவாமிக்கு மகா பிராயசித்த அபிஷேகம்

கைலாசநாதா் கோயிலில் ஏகாதச ருத்ர ஹோமம்

டெங்கு கட்டுக்குள் உள்ளது: நலத்துறை நிா்வாகம்

மு.வி.ச. உயா்நிலைப்பள்ளியை தரம் உயா்த்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT